states

img

“வெறுப்பை விதைத்து ஆதாயம் தேடுபவர்களை வாலிபர் சங்கம் எப்போதும் எதிர்த்து நிற்கும்”

கொல்கத்தா, மே 13- வெறுப்பை விதைத்து ஆதாயம் தேடுபவர்களை எப்போதும் எதிர்த்து நிற்கும் அமைப்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் துவங்கியுள்ளது. கொல்கத்தா எஸ்பிளனேடில் உள்ள ராணி ராஷ்  மோனி சாலையில் பல்லாயிரக்கணக் கான மக்கள், வங்காளத்தின் புற நகர்ப் பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான இளைஞர்கள் அணி வகுத்து செல்வதை காண காத்திருந்த னர். 

மாநாட்டை தொடங்கி வைத்து  சீத்தாராம் யெச்சூரி பேசுகையில்,  “வரலாறு கருத்துக்களை உருவாக்குகிறது, வெறுப்பின் புல்டோசர்கள் அல்ல. பொது  முதலீட்டை விற்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இலங்கையில் பெரும்பான்மை யினரை மகிழ்விப்பதற்காக சிறு பான்மையினரை வேட்டையாடிய ஆட்சியாளர் ஹெலிகாப்டரில் தப்பிச்  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் இருந்து வீசும் காற்று இந்தியாவை வந்தடைய அதிக நேரம் எடுக்காது” என்று  எச்சரித் தார். பகத் சிங், ரவீந்திரநாத் தாகூர், ஜோதி பாசு, சத்யஜித் ரே போன்ற பலரது சித்திரங்கள் மாநாட்டு அரங்கை அலங்கரித்திருந்தன. இந்த  நிகழ்வில் காவல்துறையின் அட்டூழி யத்தால் கொல்லப்பட்ட மாணவர் தலைவர் அனீஸ் கானின் தந்தை சலேம் கான் மற்றும் திரிணாமுல் குண்டர்களால் கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் வித்யுத் மண்டலின் தாயார் அமலா மண்டல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொது மாநாட்டுக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அபாய் முகர்ஜி, சிபிஎம் மேற்கு வங்க செயலாளர் முகமது சலீம், வாலிபர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய தலைவர் பி.ஏ. முகமது ரியாஸ், இணைச் செயலா ளர்கள் ப்ரீத்தி சேகர், ஹிமான்கண ராஜ் பட்டாச்சார்யா, மேற்கு வங்க மாநில செயலாளர் மீனாட்சி முகர்ஜி,  தலைவர் துருபஜோதி பட்டாச்சார்யா, இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் வி.பி. ஸானு, பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

பிரதிநிதிகள் மாநாடு

பிரதிநிதிகள் மாநாடு வெள்ளி யன்று (மே 13) தொடங்கியது. இந்திய மொழிகளின் சங்கமமாக விண்ணதிரும் முழக்கத்துக்கிடையே பி.ஏ.முகமது ரியாஸ் கொடியேற்றினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதிலிருந்தும் 502 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  பிரதிநிதிகள் மாநாட்டை முன்னணி பத்திரிகையாளர் சசி குமார் துவக்கி வைத்தார். மாலை யில், சங்கத்தின் முன்னாள் நிர்வாகி கள் பங்கேற்ற கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் எம்.ஏ.பேபி, கேரள சட்டசபை சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் உள்ளிட் டோர் உரையாற்றினர்.

மேற்குவங்க காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் தலைவர் அனீஸ் கானின் தந்தை சலேம் கான், திரிணாமுல் குண்டர்களால் கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் வித்யுத் மண்டலின் தாயார் அமலா மண்டல் ஆகியோர்  வாலிபர் சங்க அகில இந்திய மாநாட்டில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் ஆகியோருடன்.